ஓடுகின்ற மேகங்களே
கொஞ்சம் நில்லுங்கள் -என்
ஒய்யாரி அவளிடத்தில்
சென்று சொல்லுங்கள்
நாடுகின்ற காதலினை
ஏற்கச் சொல்லுங்கள்
நாடுகின்ற காதலினை
ஏற்கச் சொல்லுங்கள் நான்
நாளும் படும் வதையை
நன்றே சொல்லுங்கள்
பாடுகின்ற பாவிஜெல்லாம்
அவளே இருக்கிறாள் என்
பைங்கிளி அவள் நினைவால்
நானும் இருக்கிறேன்
தேடுகின்ற சுகமெல்லாம்
அவளில் உள்ளது என்
தேகமும் அவளாலே
மெலிந்து செல்லுது
சிந்தஜெல்லாம்
அவள்தானே
நிறைந்திருக்கிறாள் -என்
சிங்காரி அவள் ஏனோ
எனை மறுக்கிறாள்
எனக்காக ஓடுகின்ற மேகங்களே
கொஞ்சம் நில்லுங்கள் .- என் ஒய்யாரி
அவளிடத்தில் சென்று சொல்லுங்கள் ...................??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக