புதன், 22 பிப்ரவரி, 2012

நினைவுத்தீ..

உன்னை
நினைக்கும் பொழுதுகளில் எல்லாம்
மறக்கவே வேண்டுகிறேன்.
நீ
என்னை மறுத்து
... தூரப்போயினும்,
நூராமல்
இன்னும் எரிகிறது
உன்
நினைவுத்தீ..

தவறினால்

ஆதாம் ஏவாள் அன்று
செய்த தவறினால் இன்று
எத்தனையோ இதயங்கள்
அழுதுகொண்டு இருக்கின்றன
காதல் என்னும் பெயரினால்...

நன்பியை காதலிப்பதாக!!!

நான் என்காதலை கூறச் சென்றபோது
அவன் தன் காதலை முதலில் சொன்னான்
என் நன்பியை காதலிப்பதாக!!!

மாது!!!

ரத்தம் கொதிகொதிக்கும்....
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல..!
சித்தம் துடி..துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஒர் இலை போல....!
பனித்துளிதான் என்ன செய்யுமொ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினால் மாது!!!
...

சுயநலவாதிகள்..

இறைவா
என்னை மீண்டும் உன் இடத்துக்கே
எடுத்துவிடு .. இந்த உலகில் வாழும் மனிதர்களை
எனக்கு பிடிக்கவில்லை எல்லோரும்
சுயநலவாதிகள்..

தவறுகள்.....!!!

வாழ்க்கையை எளிதாக்குகிறது பணம்,
சுவாரஸ்யமாக்குகிறது காதல்,
மகிழ்விக்கிறது வெற்றிகள்,
எச்சரிக்கிறது அனுபவங்கள்,
சுமையாக்குகிறது செய்த தவறுகள்.....!!!

கண்ணாடி குவளை

காதல் ஒரு
கண்ணாடி குவளை
இறுக்கமாக பிடித்தால்
உடைந்து விடும்
மெதுவாக பிடித்தால்
கை நழுவி
உடைந்து விடும்

மறக்க முடியாத

மறக்க முடியாத உன் நினைவுகள்நான் தூங்கும் போது என்கண்ணைத் தூங்க விடாமல்கலங்க வைக்கிறதுஇருந்தும் என் கண்கள்உன் நினைவுகளை சுமக்கவே தயாராகி விட்டதுஅன்று ஒரு நாள்பச்சைப் பசும் சோலைகள் நடுவேஉன் மார்பில் தலை சாய்த்தேன் நான்அந்த நிமிடம் என்னை அறியாமலேகாதல் அதிகரித்ததுகண்ணா கண்ணாம்மூச்சி ஆட்டம் போல் என் வாழ்க்கையும் ஆகிவிட்டது ..

இதயங்களை நேசி..

உன்னிடம் அன்பாக பேசும்
பொய்யான உள்ளங்களை விட
உன்னிடம் உரிமையோடு
சண்டை போடும்

அன்புக்குரியவளே

அன்புக்குரியவளே உன்
அன்பு மொழிகேட்கும் பொது
அகம் மலர்கிறது
அன்புமொழி கேட்காத பொது
அகம் வாடுகிறது ஆசைகுரியவளே
அன்பு மொழி பேச
ஆசை யோடு அழைக்கிறேன்.
அழைப்பு இது வருவய?

வாழ்கை இல்லை...

என் இதயம் எங்கே?
என் ஜீவன் எங்கே?
சொல்வாய என் உயிரே?

கண்ணீர் உந்தன் நண்பன் இல்லை
காதல் மட்டும் வாழ்கை இல்லை...

கண்கள்

காதல் வருவதற்கு காரணம் கண்கள்
அந்த கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்
பெண்களின் இதயம் ஒரு செங்கள்
அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ
அப்பாவி ஆண்கள்.
என் நிம்மதி செத்துவிட்டது என் சந்தோஷம் சாம்பல் ஆனது! இது இயற்கை மரணம் அல்ல! இது தற்கொலையும் அல்ல! இது கொலை கொடூர படுகொலை என் நிம்மதி சந்தோஷம் கொன்றவள் நீ! அதற்கு சாட்சி என் மனதில் என்றும் உன் நினைவு...!

பொருள்

தேடி தேடி கிடைத்த பொருள்
 எளிதில் தொலைவதில்லை
தேடும் முன்னே கிடைத்த
 ஏதும் வாழ்வில் நிலைபதில்லை

அப்பாவி ஆண்கள்

காதல் வருவதற்கு காரணம் கண்கள்
அந்த கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்
பெண்களின் இதயம் ஒரு செங்கள்
அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ
அப்பாவி ஆண்கள்.

அழகிகள்

அசரவைக்கும் அழகிகள் - இங்கே
ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் - என்
உசிரைப்பறிக்கும் அளவிற்கு அழகு
உன்னைத்தவிர ஒருத்திக்கும் இல்லை

... என் நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குளனிக் குயிலே
உன் பிள்ளைச் சிரிப்பிற்கும்
செல்லச் சினுங்கலுக்கும் - இந்த
அரபு நாட்டையே உன்னிடம்
அடகு வைக்கலாம்

கணபதிபுரம் வாழும் கானமயிலே - உன்
கடைக்கண் பார்வைக்கும்
முன்கோப முறைப்புக்கும்
ஈடான அழகு
எனக்குத் தெரிந்து எதிலும் இல்லை.....

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கனவுகள்

கருப்பு வெள்ளை கனவுகள் தான் வருமாம்

நீ வரும் கனவு மட்டும் எப்படி வண்ணத்தில் ?..

இரவு என்பதற்காக பஞ்சவர்ண கிளி கருப்பாய் இருக்காதே என்கிறாய

அதுவும் சரிதான்......

வணக்கம் ...

மகிழ்ச்சி மனநிறைவு என்பது அவரவரின் நோக்கத்தையும் , தேவையையும் பொருத்தது .
ஒரு சிறிய துளியிலும் கடலை பார்த்து மகிழ்ச்சி அடையும் மனபக்குவம் இருந்தால் எளிமையிலும் இனிமை காண முடியும் . அந்த இனிமையும் , மனமகிழ்ச்சியும் உங்களை அடையலாம் கட்டுவதற்காகவே அமையும்..எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தூர எறிந்துவிட்டு மகிழ்ச்சியுடன் இந்நாளை துவங்குங்கள்

 

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அர்த்தமில்லாமல் பிரிந்து செல்வது

அர்த்தமில்லாமல் பிரிந்து செல்வது
ஆண்களுக்கு அழகாக இருக்கலாம்...
ஆனால், அர்த்தமே நீதான் என்றிருக்கும்
பெண்களுக்கு இது அர்த்தமற்ற வாழ்வுதான்

... ஒவ்வொரு வினாடியும் வினாக்களைக் கேட்டால்.....
.விடை சொல்ல வினாடிகளை எங்கே தேடுவது?

விசித்திரமான உன் கொள்கைக்கு
வித்தியாசம் காண என்னால் முடியாது......

வெளி உலகிற்கு நீ ஒரு வெள்ளிக் கிண்ணமாக இருக்கலாம்
ஆனால், காதலை கனங்களில் மாற்றிக்கொள்ள
நான் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணல்ல..
 
உன் நினைவுகளை
எங்கே தொலைப்பது என்று தெரியவில்லை ...!!!

ஏதோ
ஒரு
... சொல்லில் !

ஏதோ
ஒரு
வாசனையில் !

ஏதோ
ஒரு
பாடலில் !

சிறு பிள்ளையின்
சிரிப்பில் !

மாலையின்
சிறு மழைச்
சாரலில் !

இரவின்
நீண்ட
நிசப்தத்தில் !

என..

ஏதோ
ஒரு வகையில்
உன் ஞாபகத்தை
நினைவுபடுத்தி
கொண்டேஇருக்கிறது....

வியாழன், 9 பிப்ரவரி, 2012

புதுமைப் பெண் !!




போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
... செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!!!

------------ பாரதி !!!!!!!

நினைவுகளுடன்...!

பருக நீரின்றி உடல்
வற்றி கிடந்தாலும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்தமறுப்பதில்லை...!!
உன் நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும் போது
நிரந்தர பிரிவுகள்
என்றும் இல்லை...
என்றென்றும்
உன் நினைவுகளுடன்...!

உயிருள்ள தாஜ்மஹால்

 
என் ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்......
இல்லையேல்....
உன் காதல் உள்ளவரை
என் ஆயுள் போதும்.........
 
உண்மையான
காதலை
இழந்த‌
பின்பும்
அதை
...
...மறக்காமல்
வாழும்
அனைவருமே
ஒரு
.
.
.
.
"உயிருள்ள தாஜ்மஹால் தான்

நட்பு உயர்வானது !!!

உன் நட்பை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன் .....!
ஆனால் என் கவிதை கூட என்னை நேசிக்காமல்
 உன் நட்பையே நேசிக்கிறது என்னை போலவே .....!
உன்னதமாய் செய்யப்படும் காதலை விட

உலகமே வழிபடும் இறைவனை விட

உடலை இயக்கும் உயிரை விட

உயிர் நண்பனின் நட்பு உயர்வானது  !!!


♥♥ அழகா ♥♥



♥♥கண்ணழகா..காலழகா
பொன் அழகா ..பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா?
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம்அழகா?
உயிரே உயிரே உனைவிட எதுவும்
... உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி♥♥


நினைக்க யோசிக்கிறாய்

 
நீ என்னை நினைக்க யோசிக்கிறாய்
ஆனால்
நான் உன்னை நினைப்பதற்காகவே
சுவாசிக்கிறேன்
 
தூரத்தில்

நான்
வரும்பொழுது..!

...
என்னை
கண்டும் காணாமல்
நடிப்பாயே

இன்னும்...

நெஞ்சில் நிற்கின்றன
அந்த நினைவுகள்....

அழியாமல்...

அம்மாவை



அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
...
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை

கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!

அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

சகித்துக்கொண்டும்


எப்போதும்
என்ன பேசினாலும்
கேட்டுவிட்டு
சிரித்து கொண்டே
இருப்பதன்
... அர்த்தம்
சந்தோஷப்படுகிறார்கள்
என்றுதான் இல்லை.

சகித்துக்கொண்டும்
இருந்திருக்கலாம்.
See More

கண்ணிர் துளி.

வலிகளில் சுகமான வலி காதல் வலி .....
துளிகளில் சுகமான துளி கண்ணிர் துளி ....
காதலுக்கு பிடித்த துளி கண்ணிர் துளி ....
இதயத்துக்கு பிடித்த சுகமான வலி ....
காதல் வலி ...........arm
காதல் வலி இன் பரிசு கண்ணிர் துளி.

காதலர் தினம்

காதலிப்பவர்களுக்கு காதலர் தினம் உண்டு
காதலில் தோல்வி உற்றவர்களுக்கு
கண்ணீர் துளி உண்டு
காதலிப்பவர்கள் இதயத்தை பரிமாறிக்கொள்வர்கள் ...
காதலில் தோல்வி உற்றவர்கள்
...
மது அருந்திக்கொல்வர்கள் *********
**********************
காதலர் தினத்தில் காதலர்கள் உல்லாசமாக இருப்பார்கள்
ஆனால் தோல்வி........
உற்றவர்கள் அதை நினைத்து மனம் உடைந்து இருப்பார்கள்
காதலர் தினம் சிலருக்குத்தான்
பலருக்கு காதல் தோல்வி உற்றதினம் !!!!!!!!!!!!!!

உலகத்தில் காதலில் வெற்றி பெற்றவர்கள்>>>>> 30% ??

தோல்வி உற்றவர்கள்>>>>> 70% ???

அதில் அதிகமாக தோல்வி உற்றவர்கள்

ஆண்களா ?????

பெண்களா ?????
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
*****
************************A.N.S,BOYS
See More

உன் நினைவு

சொந்தத்தில் வந்தது பாசம்
கற்பனையில் வந்தது கவிதை
சோகத்தில் வந்தது கண்ணீர்
தூக்கத்தில் வந்தது கனவு
தனிமையில் வந்தது உன் நினைவு

நீ!


மலர் என்று
நினைத்து

உன்னை
பறித்தேன்
...
நீயோ?

குத்தினாய்
முள்ளாக...

என்னை...!
 
 
நீ!

என்னை பிரியும்
நேரம்...

... நான்!

உன்னைவிட்டு பிரியும்
நேரமாக
இருக்க வேணும்
(மரணம்)

அம்மா .....


அம்மா .....
தரணியில் உயிர்களை படைத்தவன் பிரம்மா.....

அவனை நான் கண்ணடதில்லை.......

... தாய்மையோடு தன்னுடலில் என்னுயிரை தளிரசெய்தவள் என் அம்மா........

இவளைகண்டிருகிறேன் என்னுயிராய் கொண்டிருக்கிறேன்......

இப்போது புரிகிறது உயிரை படைப்பது பிரம்மா இல்லை நம் அம்மா.........

தாய் சொல் மிக்க மந்திர மில்லை
என் தாயை தவிர வேறு தெய்வமும் இல்லை.

சனி, 4 பிப்ரவரி, 2012

உன்னைத்தான்


வறுமை  என்னை வாட்டுகின்றது,
    அதனால் நீ என்னை வெருகின்றாய்.
நாளை நானும் ஒரு அம்பானியகலாம்,
    அன்று நீ வருந்தப் போகின்றாய்.

ஆனால்,  அன்றும் உன்னைத்தான்
       கதலித்துக்கொண்டிருப்பேன்,
              நீ என்னை விரும்பினால்.
   

சகாவும் நான் தயார்,


உனக்காக காத்திருக்க நான் தயார்,
   என்னை நீ ஒருகணமேனும் சிந்திப்பாயானால்.
உனக்காக வாழ நான் தயார்.,
   நீ என்னை ஏற்றுக்கொள்வாயாயின்.
உனக்காக சகாவும் நான் தயார்,
     நீ என்னை வெறுப்பாயானால்.

முடியாமல் தவிக்கின்றேன்,


என்னவளே உன்னை நினைத்த
   நாட்களை விட ,
உன்னை மறக்க நினைத்த நாட்கள்
   அதிகமடி.
முடியாமல் தவிக்கின்றேன்,
             உன்னை மறக்கவில்ல/  என்னை நான் இழக்காமல் இருக்க.
                                                                                            

மனதை பறித்த- உனக்கு



காதலியே என் மனதை பறித்த- உனக்கு
     உன்னிடம் கொடுக்க றோயாவில் இருந்து
      ஒரு பூவை பறித்து உன்னிடம் கொடுத்தேன்.
ஆனால்,
           நீ பித்தெரிந்தது ரோயாவை அல்ல
                 என் இதயத்தை.
நான், பறித்தது உன்னிடம் கொடுக்க,
      நீ பித்தெரிந்தது என்னை வெறுக்க.
          
           
    

காயம்பட்ட -சித்திரம்

என் மனம் ஒரு காயம்பட்ட  -சித்திரம்
     உன்னை பார்க்கும் முன்பு வரை,
இன்று என் மனமோ,   வர்ணம் பூசிய சுவரோவியம்
    உன்னை கண்ட நாளில் இருந்து.
அந்த சித்திரத்தை உன்னிடம்,  தர
    ஆசைப் படுகின்றேன்-  நீயோ
                                    நிராகரித்து செல்கின்றாய்.
                                               (அழகற்ற சித்திரம் என்பதால்.)


நல்ல கணவன்



பெண்ணே,
   உன்னுடைய கணவன்
ராமனாக வர எண்ணாதே
நல்லவனாக வர
ஏன்னு, ஏன் என்ன்றால்,
ராமனும் கூட ஒரு கட்டத்தில்
  தன் மனைவியை
     சந்தேகப்பட்டவன்தான்.