வியாழன், 15 டிசம்பர், 2011

பொறுமை...........

ஏ மலைகளே !!
ரொம்ப காலமாய் நிற்கிறீர்களே
உட்காந்து ஓய்வெடுங்கள் ..............??

ஏய் மலைகளே யாருக்காக ,
காத்திருக்குறாய் ??
நீ எதிர்பார்ப்பது நிச்சயம்
   நடக்கும் என நீ நம்புகிறாயா ??!!

ஏ மலைகளே நீங்களே பொறுமைக்கு உதாரணம் ..........!!

விடியலுக்காக..........

வெண்ணிலா ஒன்று
விம்மி அழுகின்றது
விடியலுக்காக................

கலங்காதே !!

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
புரிந்து கொள்வாய்
பத்து மாதம் சுமந்த
பத்தினியும் நீதான்
புலம்பித் தவிக்கும்
வெண்ணிலாவும் நீர்தான்
வரதட்சணைக்கு
வடிவம் கொடுக்கும்
வில்லியும் நீதான்
நிலையில்லா இந்த வையகத்தில்
எத்தனை அவதாரம் உனக்கு
அழுபவலும் நீதான்
அழ  வைப்பவலும் நீதான்..........

அந்தரிக்கும் ஆத்மாக்கள்.......


இரத்தம் பாய்ந்த மண் மீது

சொகுசு பஸ்ஸில் சுற்றுலா

கந்தகம் கலந்து கண்ணீர்  மிதக்கும் வடக்கில் ......

ஏசிவான் திருவிழா .......!!

சத்தைத் துண்டுகளை கூட்டிப் புதைத்த மண்ணில்

சந்தோஷ பவனி .

பாழாய் போன உறவுகள்  எங்கே..........??

இமயம் தொட......

தாய் தந்தையை  மதி
உயிர் தந்த
உதிரத்தை பாலாக்கிய
கண் முன் உயிருடன்
உலாவும் தேய்வங்கள்
பயணம் தொடங்கும் முன்
அவர் பாதம் தொழு
வெற்றி வழிசமைக்கும்......

குப்பை மேட்டில் ................

குப்பை  மேட்டில்
குறின்சிப்பரல் நீ
மௌநமாய் தேடுவது
உணவைய?  உன்
உறவுகலையா ???

இழப்புகள் .......

தொலைந்து போன சொந்தங்களை
தேடுகின்ற பந்தங்களே
தொலைந்து விடாதீர் உங்கள்
சொந்தக் கால்களையும்
இழந்தப்வை இலக்கப் பட்டவை தான்
இருப்பதை இழக்காதீர் .................!!

விடியல் பிறக்கும் ??

குப்பைகளை குடைந்து குடைந்து
எந்த வகையில் தேடினாலும் உனக்கு
கிடைக்க போவதோ குப்பைகள்தான்
உனக்குள்ளேயே  உன்னை
அழகாய் தேடிப்பார்
புதியதோர் விடியல் பிறக்கும் !!!!

பாழைப் போகும் பிஞ்சுகள் .............!!



பின் விளைவு தெரியாது
பயணிகளின் பிறப்பகத்தில்
பாழைப் போகும்    பிஞ்சுகள் .............!! 

எத்தனை ஏக்கங்கள் .......!!


குப்பை பைகளிடையே
வயிற்ரை நிரப்பி
வறுமைப் பசி போக்க
வாரியடித்து ஓடிவரும் ...!!
வண்டுகளின் வதனத்தில்
வறுமையின் கொடுமையில்
எத்தனை ஏக்கங்கள் ........??